சனி, 23 அக்டோபர், 2010

உன்னோடான கணங்களில் .......

நதிக்கரையில்
தோற்றுப்போய்க்கிடக்கும்
சருகுகளென
மனம் வீழ்ந்து கிடக்கிறது
கடலைச் சென்றடைய முடியாமல்....

உனக்காகச் செய்யப்பட்ட
என் இரவுகளில்
துடித்துக்கொண்டிருகிறது
என் மடியில் உறங்கும்
உன் நினைவுகள்......

என்னுடைய
எல்லா அசைவுகளிலும்
நீயும் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்
அறிவுரை கூறிக்கொண்டும்
ஆறுதல்படுத்திக்கொண்டும்
சிலவேளைகளில் திட்டிக்கொண்டும்கூட....

நீண்ட பயணங்களும்
நிரம்பிவழிந்துகொண்டிருக்கும் சிக்கல்களும்
தீர்ந்துவிடும் போலிருக்கிறது
நீ கிடைத்துவிடும் கணங்களில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக