திங்கள், 15 ஆகஸ்ட், 2011

வெட்கமேயில்லாது தீண்டிய மழைத்துளி..

யாரோ வருவது போல்
திடு திடுவென்று
ஆரவாரத்துடன்
யன்னல் கண்ணாடியில்
வழிந்து நடந்து வந்தது
மழைத்துளி
என்னைத் தீண்ட.....
முடியாமல்
ஆக்ரோஷத்துடன் திரும்பவும் வந்தது
பயந்து கொண்டே
ஒளித்திருந்தேன் அறையில்
அதை பார்த்தபடி....
மீண்டும் முயற்சித்தது
பலிதாமாகவில்லை.....
திடீரென காணவில்லை மழைத்துளிகளை...
கொளுத்திய வெயிலுடன்
சூரியன் வந்தான்
புளுக்கத்திலிருந்து தப்பிக்க
தென்றல் தேடினேன் முற்றத்தில்..
எங்கிருந்தோ
சடாரென்று வந்து
என்னை
தழுவிக்கொண்டது மழைத்துளி...
வெட்கமேயில்லாமல்
என்னில் எங்கெல்லாமோ
ஊர்ந்து என்னைத் தின்றது..
நாற்குணங்களும் துறந்து
நானும் ஆரத்தழுவினேன்
கைகள் விரித்து
முகம் நிமிர்த்தி...
இதமானதாய் தானிருக்கிறது
மழைத்துளியின் தீண்டலும்
தென்றலின் தொடுகையை விட....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக