திங்கள், 15 ஆகஸ்ட், 2011

உனக்காகச் செய்யப்பட்ட என் இரவுகள்....

நதிக்கரையில்
தோற்றுப்போய்க் கிடக்கும்
சருகுகளென
மனம் வீழ்ந்துகிடக்கிறது
கடலைச் சென்றடைய முடியாமல்...
உனக்காகச் செய்யப்பட்ட
என் இரவுகளில்
துடித்துக்கொண்டிருக்கிறது
என் மடியில் உறங்கும்
உன் நினைவுகள்....
என்னுடைய
எல்லா அசைவுகளிலும்
நீயும் வந்துகொண்டிருக்கிறாய்
அறிவுரை கூறிக்கொண்டும்
ஆறுதல்படுத்திக்கொண்டும்
சில வேளைகளில்
திட்டிக்கொண்டும் கூட......
நீண்ட பயணங்களும்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கும் சிக்கல்களும்
தீர்ந்துவிடும் போலிருக்கிறது
நீ கிடைத்துவிடும் வினாடிகளில்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக