வியாழன், 24 நவம்பர், 2011

வாலறுந்த நெத்தலிகள்....

 
இந்துக் குடாக்கடலொன்றின்
இளம்பாறை இடுக்குகளில்
பிறந்தெழுந்து தேம்பியழும்
வாலறுந்த நெத்தலிகள் நாம்....
சுண்ணாம்புப்பாறையின் தகிக்கும் வெப்பத்தில்
சுற்றிச் சுழன்று பல்கிப் பெருகி
கூடிக்குலவி கும்மாளமிட்டிருந்தோம்
பாசி உண்டு
பவளப்பாறைகளில் படுத்தெழுந்து
பவித்திரம் பெற்றோம்...
மீனுண்ணிகளுடன் கைகோர்த்த
ஊனுண்ணிகளின்
பிரமாண்டமான வாய்களுக்குள்
போனது போக
வாலடித்தல்களில்
மாண்டது மாள
ஏழுகடல் ஏழுமலை தாண்டிவந்தும்
ஏதிலிகளாய் குளிர்கடலில்....
எதுவுமே இல்லை
சந்தோசங்கள்
சம்பிரதாயங்கள்
நம்பிக்கைகள்
நலன்கள்...
ஏதுமில்லா
இன்னமும் குளிர்கடலில்
குறுகிக்கொண்டு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக