ஒரு கனவாய் நடந்து முடிகிறது எல்லாமும்
சுதாகரிக்கவும் உணர்ந்துகொள்ளவும் அவகாசமின்றி...
உச்சஸ்தாயிகளும் கீழ்ஸ்தாயிகளும் கொண்ட
ஒர் இசையென
ஏற்ற இறக்கங்களுடன் இந்த வாழ்க்கை..
காட்டுவழிப் பாதையாய்
அனலும் சுனையும் இருகிறது..
புற்கள் வருடிய பாதங்களை முட்கள் வதைக்கிறது..
பருவகாலங்களென
இயல்பாயும் சிலசமயங்களில் அதிர்வுகளுடனும்..
தேர்ந்த கலைஞனின் கைவண்ணமாக இல்லாது
பிழைகள் மலிந்ததாய்...
நங்கூரங்களை கரையில் வைத்துவிட்டு
நடுக்கடலில் ஒரு பயணம்
திசை தெரிந்தால் அதிர்ஷ்டம்.
வாளின் கைகளிலா
இந்த வாழ்க்கை...

சுதாகரிக்கவும் உணர்ந்துகொள்ளவும் அவகாசமின்றி...
உச்சஸ்தாயிகளும் கீழ்ஸ்தாயிகளும் கொண்ட
ஒர் இசையென
ஏற்ற இறக்கங்களுடன் இந்த வாழ்க்கை..
காட்டுவழிப் பாதையாய்
அனலும் சுனையும் இருகிறது..
புற்கள் வருடிய பாதங்களை முட்கள் வதைக்கிறது..
பருவகாலங்களென
இயல்பாயும் சிலசமயங்களில் அதிர்வுகளுடனும்..
தேர்ந்த கலைஞனின் கைவண்ணமாக இல்லாது
பிழைகள் மலிந்ததாய்...
நங்கூரங்களை கரையில் வைத்துவிட்டு
நடுக்கடலில் ஒரு பயணம்
திசை தெரிந்தால் அதிர்ஷ்டம்.
வாளின் கைகளிலா
இந்த வாழ்க்கை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக