வியாழன், 24 நவம்பர், 2011

எமது நாடுகாண் பயணங்கள்

 
சிந்துபாத் போலன்றி
சிந்தும் இரத்தத்துளிகளுடன் தொடர்கின்றது
எமது நாடுகாண் பயணங்கள்
கொலம்பஸ் போலன்றி
கொடிய விஷஜந்துக்கள் மேல் தொடர்கிறது
எமது நாடுகாண் பயணங்கள்
ஊர்சுற்றும் வேட்கையிலன்றி
உயிர் காக்கும் ஆசையில் தொடர்கின்றது
எமது நாடுகாண் பயணங்கள்

ரஷ்யாவின் பனிமலைகள்
கொலம்பியச் சுரங்கங்கள்
ஜோர்தானின் நதிக்கரைகள்
நைஜீரியப் பழங்குடில்கள்
கிறிஸ்மத் தீவுகளின் கடற்கரைகள்
பப்புவாநியூகினியின் எரிமலைகளென
உலகப் பரப்பெங்கும்
எமது காலடித்தடங்களும்
கண்ணீரும் கனவுகளும் சுமந்த எம்
மூச்சுகாற்றும்...

ஒற்றை யுரேனியச் சிறுதுகளாய்
சக்தியற்று நாம்..
அபரிமிதமான வாழ்க்கையில்
மிதந்துகொண்டே....
நிலைபெறாமல் இன்னமும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக