திங்கள், 15 ஆகஸ்ட், 2011

வெண்பனிச் சிகரங்களிலிருந்து ...

எல்லாமே இருக்கிறதே
அறிவு சொல்கின்றது.
எதுவுமே இல்லையே
மனது சொல்கின்றது.
மலர்த் தோட்டங்கள்...
மலைத் தோழிகள்...
வெண்பனிக் கூட்டங்கள்...
பன்சுவை உணவுகள்..
மாலையின் உல்லாசங்கள்..
கேளிக்கைகள் களியாட்டங்கள்..
என்றாலும் எதையோ தொலைத்ததாய்
தவிப்பு..
கற்களில் வழிந்தோடும் ஆற்றைப் போல்..
ஒட்டாமலே ஒரு வாழ்க்கை ..
தேரோடும்
தேரின் பின் ஊரோடும் வீதிகள்...
மயிலாடும்
மயிலோடு நாம் ஆடும் காடுகள்..
பலாப்பழத்தின் ருசி..
பனம்பழ வாசனை..
பொக்கைவாய் கிழவிகள்..
மொட்டவிழும் காதல்கள்..
எதுவுமே இல்லையெனினும்..
எதோ இருப்பதாய் நம்பிக்கொண்டே நாமெல்லாம்....





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக