திங்கள், 15 ஆகஸ்ட், 2011

அந்தப் பெரீய உலகம்...

டோராவும் பொஞ்பொப்பும்
கேட்கும் குழந்தைகள் அறியவில்லை
அம்புலிமாமாக் கதைகளையும் தெனாலிராமனையும்

அந்தப்புரத்து இளவரசிகளும்
அரக்கர்களும் முனிவர்களும்
மறைந்தே விட்டனர்
ஸ்பைடர்மானுக்கும் சுப்பர்மானுக்கும்
பயந்து...

பாட்டி வடை சுட்ட கதை மட்டும்
காலாவதியாகாமல்
பாட்டிகளும் காக்காக்களும்
இன்னும் உயிரோடிருப்பதால் போலும்..

படிப்பு, பட்டம்
பணத்திற்கான அலைச்சல்
பதவிகளுக்கான போட்டி
பொறாமை, கோபம்
காதல், கஷ்டம்
ஏன் வளர்ந்தேனோ தெரியவில்லை
ஒரு ராணி காமிக்ஸில் அடங்கிவிடும்
அந்தப் பெரீய உலகத்திலேயே
வாழ்ந்திருக்கலாம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக