திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தொட்டாச்சிணுங்கி மனம்..


என்னை
மென்று உமிழ்ந்திருக்கிறது
காலம் சக்கையாய்....
இன்னோர் உலகமாக்க
உந்திய மனமா இது..
தொட்டாச்சிணுங்கியாய்
சுருங்கிக்கொள்கிறது மழைத்துளிக்கும் கூட...
புத்தியும் கைகளும்
சேர்த்துவைத்த நம்பிக்கையும்
கவிதை மட்டுமே எழுதுகிறது..
அதுவும் வெற்றுக்கவிதைகள்...
ஆட்காட்டிக்குருவிகளின் கீச்சிடல்களில்
சினந்து சீறிய மனது
சிற்றெரும்புகளின் அரவங்கள் கேட்டுவிடுமோவென
அஞ்சி அதிர்கிறது....
மனம் முட்டும் சந்தோசக்காற்று
கண் முட்டும் சந்தோசக்கண்ணீரென்
வாய்விட்டு சிரித்ததெல்லாம்
மறந்து மறைந்தேவிட
ஒரு புன்னகைதான்
பொதுவானதாய் அனைத்திற்கும்...
சிரிக்கவும் பயமாயிருக்கிறது.....
என்னை மென்று உமிழ்ந்திருக்கிறது
காலம் சக்கையாய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக