திங்கள், 15 ஆகஸ்ட், 2011

எப்போது சிநேகிதா நீ காதலனாகினாய்....

காதல்மதியின் கவிதைகளில்
எனக்குப் பிடித்த வரிகள்
உனக்கும் பிடித்திருந்ததாய்
நீ கூறியபோதா....

சுதந்திர தினத்தன்று வெளிவந்த
உன் கவிதையின் கருத்துச் செருக்கிலா அல்லது
நீ தேசிய கீதம் பாடிய போதா...

அகநானூற்றுப் பாடலுக்கு
போட்டியாக எழுதிய பொருளில்
பொருத்தமான பொருள்
நீ எழுதியதாய் இருந்ததாலா....

கடைசியான கவியரங்க கைகலப்பொன்றில்
என் கண்ணின் நீர்த்துளிகண்டு
கருத்துப்பிழை செய்த உன்
கவிதையின் போதா......

எப்போது.....
சிநேகிதா! நீ
காதலனாகினாய்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக