கலாச்சாரங்களுக்கான
காவலரண்கள் உடைந்துவிட்டன.....
ஒரு போத்தல் பியருக்குள்
தள்ளாடுகிறது
தமிழனின் மானம்
பஸ் பிடிச்சு
படாதபாடுபட்டு
பிளேன் பிடிச்சு
பிரான்ஸ் வந்து
தாயின் தாலி வித்த காசில்
தண்ணியடிக்கும்
சில கழுதைகள்....
ஊரையும் மறந்து
உறவையும் மறந்து
குடும்ப பேரையும் மறந்து
குடித்துக் கூத்தடித்து
நாட்டுக்கு நீதி சொல்ல
தெருவில் நடக்கிறார்கள்.....
எங்கிருந்தோம்
எப்படியிருந்தோம்
ஏன் வந்தோம்
எப்படி வாழ்கிறோம்
என்பதெல்லாம் மறந்து
அகதியாய் இருந்துகொண்டும்
அடிதடி மன்னனாகத் துடிக்கும்
அறிவில்லாதவர்கள்....
வயிற்றைக் காப்பானென்று தாயும்
மானம் காப்பானென்று
தந்தையும்
நினைத்திருக்க
மயிற்றை வளர்த்துக்கொண்டு
மன்மதன் வேஷம் போடும்
மண்ணாங்கட்டிகள்....
விஞ்ஞானம் வளர்ந்து
மெஞ்ஞானமும் வளர்ந்து
விரைந்தோடும் உலகில்
ஒரு போத்தல் பியருக்குள்
காவலரண்கள் உடைந்துவிட்டன.....
ஒரு போத்தல் பியருக்குள்
தள்ளாடுகிறது
தமிழனின் மானம்
பஸ் பிடிச்சு
படாதபாடுபட்டு
பிளேன் பிடிச்சு
பிரான்ஸ் வந்து
தாயின் தாலி வித்த காசில்
தண்ணியடிக்கும்
சில கழுதைகள்....
ஊரையும் மறந்து
உறவையும் மறந்து
குடும்ப பேரையும் மறந்து
குடித்துக் கூத்தடித்து
நாட்டுக்கு நீதி சொல்ல
தெருவில் நடக்கிறார்கள்.....
எங்கிருந்தோம்
எப்படியிருந்தோம்
ஏன் வந்தோம்
எப்படி வாழ்கிறோம்
என்பதெல்லாம் மறந்து
அகதியாய் இருந்துகொண்டும்
அடிதடி மன்னனாகத் துடிக்கும்
அறிவில்லாதவர்கள்....
வயிற்றைக் காப்பானென்று தாயும்
மானம் காப்பானென்று
தந்தையும்
நினைத்திருக்க
மயிற்றை வளர்த்துக்கொண்டு
மன்மதன் வேஷம் போடும்
மண்ணாங்கட்டிகள்....
விஞ்ஞானம் வளர்ந்து
மெஞ்ஞானமும் வளர்ந்து
விரைந்தோடும் உலகில்
ஒரு போத்தல் பியருக்குள்
தள்ளாடுகிறது.......
தமிழனின் மானம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக