திங்கள், 15 ஆகஸ்ட், 2011

எல்லோரும் ஆயத்தமாகின்றனர் தத்தம் தெருக்களில்....

ஒரு பெருத்த மழைக்கான
கனத்த எதிர்பார்ப்புடன் எல்லோரும்
ஆயத்தமாகின்றனர்
தத்தம் தெருக்களில்
அழகிய சொற்கள் பின்னிய கவிதையாய்
புதிய தென்னங்கிடுகுகள்
அலங்கரித்தன வீட்டுக்கூரை விரிசல்களை..
அரிசி கோதுமை தானியங்கள்
தேவைக்கும் வளமைக்கும்
ஏற்றதாய் நிறைக்கப்ப்பட்டன
பக்கத்து வீட்டிலும் அதிகமாயும்..
வத்தல்கள் புழுங்கல்கள் தயாராயின
கடல் மீன்களும் கருவாடாக
பதப்படுத்தி பத்திரப்படுத்தப்பட்டது..
மரங்கள் நறுக்கப்பட்டு
மழைக்குத் துளிர் விடத் தயாராய் நின்றன
பூக்கவிருக்கும் மங்கையரென..
போரீந்த பரிசாய்
வாழ்க்கை நிர்வாணமாக்கப்பட்டு
மரநிழலில் வாழ்ந்த
மாம்பிஞ்சுகளிணை மழலைகளை
கவனிக்கவில்லை
அவர்களும்..
இவர்களும் தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக